ஞாயிறு, 15 நவம்பர், 2009

கல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்






கல்லணை ஈன்ற கடைசிப் பெண்ணாய்

நல்லுருப் பெற்ற கல்லணைக் கால்வாய்

வளைந்து நெளிந்து வயல்கள் நிறைத்து

களிப்புடன் தஞ்சை நகரில் நுழைந்து

புதிய ஆறாய் புகழினை சேர்த்து

அதிநிறை விழைவில் காத்து நின்ற

ஒரத்த நாடு பட்டுக் கோட்டை

பரந்த நிலத்தில் பாசம் பொழிந்து

சிறுத்து இளைத்து நீர்மை குன்றிட

நிறைந்த ஆர்வப் பெருக்கில் நின்ற

கடைமடைப் பேரா வூரணி மற்றும்

படுதுயர் உற்ற நாகுடிப் பகுதி

தடையறு நீரினை பெற்றுச் செழிக்க

எடுத்து மிகுநீர் வரும்நாள் என்றோ ?


என் தந்தையின் இக்கவிதை என்று நிஜமாகும் ?

5 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…

நல்லதொரு இலக்கிய நடையில்
நம் கல்லணையை பற்றி
நயமுடன் ஒரு கவிதை!..
நன்றி உங்கள் தந்தைக்கு!...

ராமலக்ஷ்மி சொன்னது…

படங்கள் அருமை. தந்தையின் கவிதை வெகு அருமை. அவர் கனவு நினைவாகுமென நம்புவோம்.

Rajeswari சொன்னது…

ஆஹா...கரிகாலனின் கல்லணை

Rathnavel Natarajan சொன்னது…

2005 நவம்பரில் அரியலூரில் நாங்கள் வந்த ரயில் நின்று விட்டது. அங்கிருந்து தஞ்சாவூர் வந்து தங்கியிருந்து பேருந்தில் மதுரை கிளம்பினோம். அப்போது கொள்ளிடம் காவேரி மற்றும் நிறைய நீர்நிலைகளை கண்டோம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியை காண முடியாது. விருதுநகர் மாவட்டக்காரர்களாகிய எங்களுக்கு அவ்வளவு நீர் வரத்தை பார்க்க கொடுத்து வைத்திருந்தது.
அரியலூரில் ரயில் நிலையத்தில் ரொட்டிக்காக எல்லோரும் வரிசையில் நின்றோம். ஏழை பணக்காரர் என்ற மனப்பாவம் அன்றே ஒழிந்தது.
வாழ்த்துக்கள் அம்மா.

michael amalraj சொன்னது…

சில வருடங்களுக்கு முன்...நவக்கிரகக் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.....காவேரிக் கறையோரமாகப் பயணம்...வறட்சியாக காய்ந்துபோய்....! தி.ஜானகிராமனின் காவேரியா இப்படி..மனம் வலித்தது.....

Pit