புதன், 15 செப்டம்பர், 2010

நம்பிக்கை மலர்கள்

"நம்பிக்கை "
என் இனிய நண்பர்களே !!!!
சிதம்பரதிலிருந்து பிச்சாவரம் செல்லும் வழியில் கிள்ளை என்றொரு சின்னஞ்சிறு கிராமத்தில் இந்த" நம்பிக்கை " இல்லம் இருக்கிறது.இது ஒரு பெண்குழந்தைகள் காப்பகம்.இங்கு 30 பெண்குழந்தைகள் உள்ளனர். 9 முதல் 16 வயது சிறுமிகள் இந்த காப்பகத்தில் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் சுனாமியில் பெற்றோரை இழந்தவர்கள் .மற்றவர்களும் ஏதோ ஒருவகையில் ஆதரவற்ற நிலையில் அந்த காப்பகத்தில் உள்ளனர்.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்த சிறுமிகளை மூன்று வருடங்களுக்கு தத்து எடுத்து அவர்களுக்கு மூன்று வேலையும் உணவு கொடுத்து வந்தது.வருடத்திற்கு இரண்டு முறை உடுத்த ஆடையும் அளித்தது.அவர்கள் தங்குவதற்கு இரண்டு  ஏக்கர் பரப்பளவில் இந்த நம்பிக்கை இல்லத்தை கட்டி கொடுத்தது.அந்த சிறுமிகள் சுனாமிக்கு முன் படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியும் செய்து கொடுத்தது.மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனம் தங்கள் சேவையை ரத்து செய்தபோது இல்லத்தின் காப்பாளர் கேட்டுகொண்டதற்கு இணங்கி அந்நிறுவனம் தங்கள் சேவையை மேலும் இரண்டு வருடங்கள் நீடித்தது.தற்போது அந்நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டது.
தற்சமயம் அப்பிள்ளைகளின்  மூன்று வேளை சாப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

சென்ற முறை நான் அந்த காப்பகத்திற்கு சென்ற போது அப்பிள்ளைகளின்  இந்த நிலை எனக்கு தெரிய வந்த போது மிகவும் வேதனை அடைந்தேன்.இல்ல காப்பாளரிடம் என்னால் முடிந்த உதவி செய்வதாக கூறிவிட்டு வந்தேன்.
என் நண்பர்களாகிய நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால் அக்குழந்தைகளுக்கு உதவுங்கள்.
முகவரி:
"நம்பிக்கை",
கிள்ளை,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.

நன்றி.

Pit