வியாழன், 31 டிசம்பர், 2009

உங்களுக்கு தெரியுமா !!!

 

குளிர்ந்த    நீரில்   தங்க   மீன்களை   தொட்டியில்   வைத் து
வீட்டில்வளர்த்தால்   மிகவும்   நல்லது . பத்து
நிமிடங்கள்   மீன்   தொட்டியை   பார்த்துக்கொண்டே
இருந்தால்   கோபமும்   ரத்தக்கொதிப்பும் போயே
போச்சு . அந்த அளவுமீன்   தொட்டிகள்    உடல்
நலனுக்கு   உதவுகின்றன . மீன்களை
பார்த்துக்கொண்டிருக்கும்   போது   மனம்   அமைதியாகிறது .



மீன்   உணவு   மனச்சோர்வை    எளிதில்    குறைக்கும் .
மீனில்   உள்ள    துத்தநாக   உப்பு     இந்த    நன்மையை  
நமக்கு    கொடுக்கிறது .    மீனில்    உள்ள    ஒமேகா -3 
என்ற   அமிலம்   மூளையை    மிகவும்    சுறுசுறுப்பாக   
வைத்திருக்க   உதவுகிறது .

திங்கள், 28 டிசம்பர், 2009

படித்ததில் பிடித்தது

கண்கள் செய்யும்
சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை
"காதல் "


விக்கல் எடுக்கின்றது ,
ஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.
நினைப்பது நீ என்றால்
நீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......


அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு
பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை ".
காரணம் அவள் பேசியது English
பயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........


என் மரணம் கூட
உனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....
ஏன் என்றால்
என் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்
காசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

வாங்க , வந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2

கோர்ட்ல மெட்ராஸ் பாஷை பேசினால் எப்படிஇருக்கும்;

1 . yes my lord -- ஆமா நைனா
2 . objection my lord -- அமிக்கி வாசி அண்ணாதே
3 . court adjourned -- உன்னோருதபா வச்சிக்கலாம்
4 . objection over-ruled -- மூடிகினு குந்து
5 . order , order , order -- ஐய கம்முனு கெடமே
( இதெல்லாம் ரொம்ப ஓவரு )

2. டாக்டர்    --     ஏன்ப்பா    ஷாக்   அடிக்குமுனு   தெரிஞ்சும்    கரண்ட்   வயர்ல
                                  விரல  வச்ச ?    அறிவு  இருக்கா ?

        சர்தார்ஜி   --    "கட்டை "   விரல்  தானே   .  ஷாக்   அடிக்காதுன்னு   நினைச்சேன் .

          (  ரொம்ப  படுத்துறாங்க  ,  முடியல )

3 .     நைட்ல்லாம்   தூக்கம்   வரல  .
         ஒன்னும்    பிரச்சன  இல்ல   , போய்  கண்ணாடிய   பாருங்க   . தூக்கம்  என்ன
          மயக்கமே   வரும் .
         தப்பா  நினைச்சிக்காதிங்க , இதான்  அழகுல  மயங்கி  விழறது.
        
        
 
      

வெள்ளி, 25 டிசம்பர், 2009

வாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1.

நான்   ரசித்த   sms  சிரிப்புகள் ..

1. கேள்வி  : சூப்பர்ஸ்டார்   ரஜினிக்கு   பிடிச்சது   இட்லியா , தோசையா?

   பதில் : தோசை .

           ஏன்  தெரியுமா ?  "கண்ணா  , இட்லி    கும்பலா   வேகும்  .... தோசை

           சிங்கிளா   தான்   வேகும் ."


   (மொக்க   தாங்க   முடியலப்பா ..)


   2. வடிவேல்   : வணக்கம்பா ..  உன்    டிரஸ்   சூப்பரா    இருக்கே ? 

              தீபாவளிக்கு   எடுத்ததா ?

   பார்த்திபன்  :  இல்ல ...

   வடிவேல் :   அப்பறம் ?

   பார்த்திபன்  :  எனக்கு   எடுத்தது .

   (  போதும்பா   நிறுத்திப்போம் . பூராத்தையும்   நிறுத்திப்போம் ....... )


3. கல்லூரி  கலாட்டா

   வகுப்பறை   --  அற்புத   தீவு

   சேர்மன்      --  வசூல்   ராஜா

   பிரின்சிபால்     --  இம்சை  அரசன்   23 ஆம்   புலிகேசி

   ஹச்  . ஓ  . டி           --  நான்  கடவுள்

   வாத்தியார்    --  படிக்காதவன்

   மாணவர்கள்   --  போக்கிரி

   கல்லூரி  வளாகம்  -- சிறைச்சாலை

   பதிவேடு     --  மௌனம்  பேசியதே

   கல்லூரி   பேருந்து  --  சுந்தரா   ட்ராவல்ஸ்

   உணவகம்      --  ஈ

   காவலாளி    --  சாமி

   பரீட்சை     --  அறிந்தும்   அறியாமலும்


   (இப்படியே    போயிட்டிருந்தா   என்னா  அர்த்தம் ...  இதுக்கு   ஒரு  

   முடிவே   கிடையாதா ......)


   ரிசல்ட்        --  சம்திங்  சம்திங் 

   அரியர்        --  எனக்கு   20    உனக்கு   18

   கேம்பஸ்  இண்டர்வியு  --  திருவிளையாடல்   ஆரம்பம் 

                         
                                     - தொடரும் ......


   (  தொடர்ர்றுமா   ....அப்ப  இன்னும்   முடியலியா  ,..அய்யய்யோ )   

 

வியாழன், 10 டிசம்பர், 2009

என் வீட்டு தோட்டத்தில் .....


நான்   வளர்க்கும்   ஈமு   பறவையை   பற்றி   சில   வரிகள்    உங்களுடன்   பகிர    ஆவலாக   உள்ளேன் .
இது   ஒரு   ஆஸ்திரேலியப்   பறவை . நம்   நாட்டில்   இப்பொழுது   தான்   ஓர்  அளவிற்கு   காணமுடிகிறது . உலகிலேயே   இரண்டாவது   மிகப்   பெரிய   பறவை   ஈமு   தான் .  உயிர்   வாழும்    பறவைகளில்    நெருப்புகோழி   தான்   மிகப்   பெரிய    பறவை .



ஈமுவால்   பறக்க   முடியாது .  ஆனால்    மிக    வேகமாக    ஓட   முடியும் .  இது   ஓட   ஆரம்பித்தால்    மணிக்கு    50  கி .மி   வேகத்தில்    ஓட    முடியும் .  ஓடி    வரும்   வேகத்தில்   அது   10  அடி    உயரத்தை    கூட    சர்வசாதாரனமாக   தாண்டிவிடும் .  இதன்   உயரம்   6  அடிக்கும்   மேல் .  அதன்   எடை   50  கிலோ   இருக்கும் .



ஈமு   பலவகை   தாவரங்களை    உண்ணும் .  குறிப்பாக    முருங்கை   கீரை   அதன்   இஷ்ட   உணவு .  எந்த   ஒரு   சிறு   பூச்சிகளையும்   விடாமல்   தின்றுவிடும் .  எல்லா  வித    தானியங்களையும்   சேர்த்து   பொடியாக்கி    அதற்கு   தீவனமாக    கொடுக்கிறோம் .  காலையில்    உண்ண  ஆரம்பித்தால்    மாலை    ஆறு    மணி    வரை   விடாமல்   சாப்பிட்டுகொண்டே   இருக்கும் .  சில    நேரங்களில்    தொடர்ந்து    15
நாட்கள்   கூட   சாப்பிடாமல்  இருக்கும் .

ஈமு   முட்டை   மிகவும்   பெரியதாக   இருக்கும் .  பொதுவாக   ஈமு   நவம்பர் , திசம்பர் , ஜனவரி   மாதங்களில்   மூன்று   நாட்களுக்கு   ஒரு   முட்டை   இடும் .


ஈமுவின்   ஒவ்வொரு   பகுதியும்    நமக்கு   பயன்படுகிறது .   ஆஸ்திரேலியாவில்   அதனுடைய   கறியை    சமைத்து   உண்கிறார்கள் .  அதன்    இறகுகள்    கைவினை   பொருட்கள்    செய்ய   பயன்படுகிறது .   அதன்   தோல்   பதப்படுத்தப்பட்டு    பைகள்   செய்யப்படுகிறது .  ஈமு    உடலில்   உள்ள    கொழுப்பு    எடுக்கப்பட்டு   ஈமு    எண்ணெய்   தயாரிக்கிறார்கள் .   அதன்    நகங்கள்    ஆபரணங்கள்    ஆக்கப்படுகின்றன .


மழை    என்றால்    ஈமுவிற்கு   மிகவும்    பிடிக்கும் .   வானம்    இருட்டி    கொண்டு   இருந்தால்    துள்ளி   விளையாடி    நடனமிடும்  .  ஈமுவின்    கழிவு
செடிகளுக்கு   உரமாக   பயன்படுகிறது . 

திங்கள், 7 டிசம்பர், 2009

வானில் சில வர்ணஜாலங்கள்




என்  வீட்டு  மாடியிலிருந்து  நான்  எடுத்த  சில  புகைப்படங்கள்









                                  அந்த   அரபிக்கடலோரம்  ஓர்  அழகை  கண்டேனே !!!!!
                             எர்ணாகுளத்தில்   மாலை  நேரத்து   சூரியன்  மறையும்  காட்சி.


Pit