நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது
ஒரு பிரச்னை இருந்து கொண்டு
தான் இருக்கிறது .வாழும் காலம்
முழுவதும் தினமும் ஏதாவது
ஒரு பிரச்னையை சந்தித்துக்
கொண்டு தான் இருக்கிறோம் .
கவலைகள் இல்லாத மனிதன்
என்று யாராவது இருக்கிறார்களா
என்றால் கிடையாது என்பது தான்
சரியான விடை . ஆனால்
எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம்
கற்பித்து நல்ல காலம் பிறக்கும்
என்று காத்திருப்பதும் உண்டு .சில
நேரங்களில் ஆன்மிக வழியில்
சில பரிகாரங்கள் செய்வதும் உண்டு .
நமக்கும் மேல் ஏதோ ஒரு
மகத்தான சக்தி உண்டு என்பது
மட்டும் நமக்கு தெரிகிறது .
அதற்கு கடவுள் என்று பெயர்
சூட்டியுள்ளோம் .இதுதான் கடவுள்
என்று குறிப்பிட்டு சொல்ல கடவுளுக்கு
எந்த வடிவமும் கிடையாது .
அனைத்து உருவங்களும் மனிதனால்
உருவாக்கப்பட்டவை தான் . எப்படி
காற்றை நம்மால் பார்க்க
முடியாதோ அதே போல்
கடவுளையும் நம்மால் பார்க்க
முடியாது . அதை உணர தான் முடியும் .
இன்று கோயில்களில் காணப்படும்
அதிகப்படியான கூட்டம் நமக்கு
எதை உணர்த்துகிறது என்றால்
மக்கள் மனத்தில் ஏற்ப்பட்டுள்ள
பயத்தை காட்டுகிறது . நாட்டில்
தவறுகள் பெருக பெருக ,
அதை மறைக்க மனிதன் கடவுளை
நாடுகிறான் . பிரார்த்தனை ,
வேண்டுதல்கள் மூலம் அதை
நிறைவேற்றிக் கொள்கிறான் .
கோயிலுக்கு செல்லும் அனைவரும்
ஏதாவது ஒரு கோரிக்கையுடன்
தான் செல்கிறோம் . ஆனால்
நம்மில் எத்தனை பேர்
கடவுளிடம் நன்றி என்று
சொல்வதற்காக செல்கிறோம் ?
நல்ல குடும்பம் , குழந்தைகள் ,
வசதி வாய்ப்புகள் அனைத்தும்
இருந்தாலும் நன்றி கூறுவதில்லை .
நம்மை விட வறியவர்களையும் ,
வசதி இல்லாதவர்களையும்
தினமும் நாம் வாழ்க்கையில் கடந்து
போகிறோம் . ஆனால் நாம்
அவர்களை ஒரு போதும்
கண்டுகொள்வதில்லை .
நம்மைச் சுற்றி இருக்கும் ஏழை
மக்களுக்கும் , வயதானவர்களுக்கும் ,
ஆதரவற்றவர்களுக்கும் நம்மால்
முடிந்த சிறுசிறு உதவிகளை
செய்யலாம் . பசிக்கு சோறுகொடுப்பது
என்பது எல்லாவற்றையும் விட
மிகவும் சிறந்த ஒரு செயல் .
"தானத்தில் சிறந்தது அன்ன தானம் "
நமக்கு தேவையற்றது என்று
நாம் நினைக்கும் சில பொருட்கள்
வறியவர்களுக்கு மிகவும் அத்தியாவசிய
பொருளாக இருக்கும் . அவற்றை
அவர்களுக்கு கொடுத்து உதவலாமே !
அதுவே நம்மை சுற்றி இருப்பவர்களிடம்
நாம் காட்டும் ஆத்மார்த்தமான
அன்பு ஆகும் .கடவுளை
வணங்குவதில் தவறில்லை..
ஆனால் அதோடு சேர்த்து
வறியவர்கள் , நோய் தாக்கியவர்கள் ,
ஆதரவு அற்றவர்கள் மற்றும் முதியவர்கள்
இவர்களுக்கு உதவுவதும் , அவர்களை
அரவணைப்பதும் தான்
உண்மையிலேயே கடவுள் வழிபாடு .