வியாழன், 19 நவம்பர், 2009

நாஸ்ட்ரடாமஸ்





நடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு .


நாஸ்ட்ரடாமஸ் என்ற தீர்க்கதரிசி 1503 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் . உலகம் இதுவரை கண்ட தீர்க்கதரிசிகளில் மிகப் பெரும் புகழைப் பெற்றவர் . அவர் எழுதிய தி செஞ்சுரிஸ் என்ற நூலில் பல நுற்றண்டுகளில் நடந்தவற்றையும் , நடக்கப்போவது பற்றியும் சொல்லப்பட்டுள்ள ஆருடங்கள் ஏராளமாய் உள்ளன . பல விஷயங்களை அவர் புதிர் போல் குறிப்பிட்டுளார் . அவரை பற்றி நான் படித்த சில நூல்கள் என்னை மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது உண்மை . பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் நியுயார்க்கின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படும் என்று மறைமுக வரிகளில் குறிப்பிட்டுள்ளார் .


மேலும் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பகைவர்கள் சதி செய்து கொல்வார்கள் என்றும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி சுட்டு கொல்லப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார் . இரண்டாம்
உலகப் போர் , விமானம் கண்டுபிடிக்கப்பட்டது , நீர்மூழ்கி கப்பல் போன்ற பல செய்திகளை அவர் கூறியுள்ளார் . மீனுக்குள் போர்கருவி வைத்து அதிலிருந்து மனிதன் போர் செய்வான் என்று நீர்மூழ்கி கப்பலை அழகாக
வர்ணித்துள்ளார்.

200 வருடங்களுக்கு பிறகு பிறந்த நெப்போலியனையும் , 400 வருடங்கள் கழித்து பிறந்த ஹிட்லரையும் அவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளது பிரமிப்பான விஷயம் . இனி வரப்போகும் ஆண்டுகளில்
நடக்கப் போவதை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் கி .பி 3600 - 3790 கால கட்டத்தில் அழியும் என்றும் தெரிவிக்கிறார் .

அவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ஞானம் வந்தது என்பதும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது . எது எப்படி இருந்தாலும் ஆறுட உலகில் நாஸ்ட்ரடாமஸ் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி .

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஆம்
இவரைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன்..
ஆயினும் அவரின் நிழற்படத்தை இப்போது தான் பார்க்கிறேன்..
பகிர்வுக்கு மகிழ்ச்சி..

Pit