புதன், 9 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா - தொடர்கிறது......

மசினகுடி ........










பந்திபூர் காட்டுக்குள் நாங்கள் பயணிக்க தொடங்கினோம்.எங்கும் அமைதி.பாதை வளைந்து நெளிந்து சென்று கொண்டே இருந்தது.கண்ணில் ஏதாவது மிருகங்கள் தட்டுபடுகிறதா என்று பார்த்தவண்ணம் பயணித்தோம்.ஒரு வழியாக கர்நாடக எல்லை முடிந்தது என்ற அறிவிப்பு தாங்கிய நுழைவு வாயிலை பார்த்ததும் மனதில் ஒரு சிறிய அமைதியுடன் திரும்பினால் எதிரே மீண்டும் ஒரு நுழைவு வாயில்.'தமிழக எல்லை ஆரம்பம்.முதுமலை புலிகள் காப்பகம் அன்புடன் வரவேற்கிறது 'என்ற அறிவிப்பு எங்களை மீண்டும் மிரட்டியது.





உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் யானைகள் தென்பட்டன.சாலையோரமாக நின்றுகொண்டு மரக்கிளைகளை உடைத்து அதன் இலைகளை தின்றவண்ணம் இருந்தன.அவற்றை வேடிக்கை பார்த்தவண்ணம் தொடர்ந்தோம்.



சில கிலோ மீட்டர் தூரம் பயணித்ததும் மீண்டும் யானை.ஆனால் இந்த முறை தனியாக நின்று கொண்டு இருந்தது.பொதுவாக ஒற்றை யானை அபாயகரமானது என்பார்கள்.அந்த யானை இலைகளையும் மண்ணையும் வாரியெடுத்து தலையில் போட்டவண்ணம் நின்றுகொண்டு இருந்தது.எங்களை போல் இன்னும் சிலரும் அந்த வழியாக அப்போது வந்தனர்.அதே நேரம் வனத்துறை காவலர் அவ்வழியாக வந்தவர் ,எங்களை உடனடியாக அந்த இடத்திலிருந்து விலக சொல்லி விட்டு அவர் மட்டும் தொடர்ந்து அந்த யானையின் நடவடிக்கையை கவனிக்க தொடங்கினார்.





ஒரு வழியாக நாங்கள் மசினகுடிக்கு வந்து சேர்ந்தோம்.மசினகுடி முதுமலையிலிருந்து ஏழாவது கிலோமீட்டரில் உள்ளது.அது ஒரு சிறிய கிராமம்.நாங்கள்தங்கவேண்டிய இடம் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.அந்த இடத்திற்கு பொக்காபுரம் என்று பெயர்.அங்கு தனியாருக்கு சொந்தமான சில ரிசார்ட்டுகள் உள்ளன.பெரும்பாலானோர் ஊட்டியில் இருந்து வந்து உடனே திரும்பிவிடுகிறார்கள்.ரிசார்ட்டுகள் தவிர வேறு வசதிகள் அங்கு இல்லை என்பதே இதற்கு காரணம்.
பயண களைப்பால் நாங்கள் அன்று வேறு எங்கும் போகவில்லை.எல்லா ரிசார்டுகளும் மின்சார வேலி போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.ஆனால் அதையும் தாண்டி விலங்குகள் வரக்கூடும் என்பதால் இரவில் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர் .




மறுநாள் ....
காலையில் கிளம்பி முதுமலை சென்றோம்.சுற்றுலா துறை அலுவலகம் சென்றோம்.ஆனால் காலை ஏழு மணிக்கு தொடங்கி ஒன்பது மணிக்குள் காட்டுக்குள் செல்லும் ரைடு முடிந்தது என்றும் மீண்டும் மாலை மூன்று மணிக்கு தான் என்றும் அங்கிருந்த அலுவலர் கூறினார்.மறுநாள் காலை ஏழு மணிக்கு வரலாம் என முடிவு செய்து அங்கிருந்து மீண்டும் மசினகுடி வந்தோம்.


 அங்கிருந்து மோயார் அணைக்கு ........





                                                                                 தொடரும்.................

6 கருத்துகள்:

Admin சொன்னது…

நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றிகள்...

சுசி சொன்னது…

ரொம்ப தைரியம்தாங்க உங்களுக்கு.. எனக்கு படிக்கவே பயமா இருக்கு.

ஷர்புதீன் சொன்னது…

kalagunga...

butterfly Surya சொன்னது…

புகைப்படங்களுடன் அருமையான பதிவு.

நன்றி.

SUFFIX சொன்னது…

எல்லா படங்களுமே அருமை, பகிர்விற்கு நன்றி

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
எல்லா புகைப்படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.

Pit