திங்கள், 14 ஜூன், 2010

ஊருக்கு போகலாமா? மீண்டும் தொடர்கிறது.....

மோயார் அணை









மசினகுடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதி பெற்று உள்ளே செல்லவேண்டும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை.




நீர் தேக்கத்திற்கு அருகே சென்று அதன் அழகை ரசித்து விட்டு வந்தோம்.இந்த அணைக்கு செல்லும் வழியும் அடர்ந்த காடு தான்.ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக புள்ளிமான்கள் நின்று கொண்டிருந்தன.நமது நடமாட்டம் கண்டதும் ஓடி விடுகின்றன.









பிறகு அங்கிருந்து சிங்காரா என்ற இடத்திற்கு சென்றோம்.இங்கு ஒரு மின் உற்பத்தி நிலையம் உள்ளது.உள்ளே அனுமதி கிடையாது.ஆனால் போகும் வழியில் அழகிய நீரோடை ஒன்று உள்ளது.அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு மீண்டும் மசினகுடி வந்து சேர்ந்தோம்.
அன்று மாலை நாங்கள் எங்கும் செல்லவில்லை.ஒரு சிலர் தனியார் வைத்திருக்கும் வாகனங்களில் (ஜீப் )ரைடு போனார்கள்.ஆனால் அது எந்தவித பாதுகாப்பும் இல்லாதது.அப்படி போவது மிகவும் அபாயகரமானதும் கூட.
மறுநாள் காலை ஏழுமணிக்கு மீண்டும் முதுமலை வந்து வன அதிகாரியிடம் டிக்கெட் வாங்கிகொண்டு காத்திருந்தோம்.ஏழரை மணியளவில் பெரிய வாகனம் ஒன்றில் நாங்கள் ஒரு குழுவாக கிளம்பினோம்.மொத்தம் பதினான்கு பேர் இருந்தோம்.எங்களை தவிர்த்து வாகன ஓட்டுனர்,அவரது உதவியாளர் இருந்தனர்.மேலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருவரும் எங்களுக்கு துணையாக வந்தார்.






வாகனம் புறப்பட்டு சிறிது தூரம்பிரதான சாலையில் சென்றது.பிறகு வனத்துறையினர் மட்டும் பயன்படுத்தும் அடர்ந்த காட்டு வழியில் போக ஆரம்பித்தது.எங்கும்அமைதி.இரண்டு பக்கமும் உற்று பார்த்தவண்ணம் பயணித்தோம்.முதலில் நாங்கள் பார்த்தது சாம்பல் நிற மான்கள்.எங்களை பார்த்ததும் மிரண்டு ஓடின.










சிறிது நேரம் பயணித்ததும் கூட்டம் கூட்டமாக புள்ளி மான்கள் நின்றுகொண்டிருந்தன  .பிறகு சிறிது தூரம் சென்றதும் கூட்டமாக காட்டெருமைகள் நிற்பதை பார்தோம்.அதையும் தாண்டி தோகை மயில்கள் ஆங்காங்கே நின்றன .கடைசியாக யானைகள் நின்றன.மீண்டும் நாங்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
மதியம் அங்கிருந்து ஊட்டிக்கு கிளம்பினோம்.










ஊட்டி அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மொத்தம் முப்பத்தியாறு கொண்டை ஊசி வளைவுகள் கடக்க வேண்டும்.மிகவும் செங்குத்தாக.வேகமாக பயணிக்க முடியாத படி சாலை செங்குத்தாக ஏறியது சற்றே பயமாக இருந்தது.
ஊட்டியில் ஒரு நாள் தங்கி

























ரோஜா தோட்டம் ,தாவரவியல் பூங்கா என்று சுற்றிவிட்டு ஊருக்கு திரும்பினோம்.  மறக்க முடியாத ,அற்புதமான பயணமாக அமைந்தது.

4 கருத்துகள்:

ஷர்புதீன் சொன்னது…

கலக்குங்க ., நல்லா சுத்தி பார்த்தீங்க போங்க., நம்ம ஆசையை தூண்டிடீன்களே

சுசி சொன்னது…

ரொம்ப அழகா இருக்குங்க..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு....

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
மான்கள், மயில், காட்டெருமை, இயற்கை எழில்.
வாழ்த்துக்கள்.

Pit