வெள்ளி, 8 ஜனவரி, 2010

சிதம்பரம் நடராஜர் ஆலயம்







'கோயில்'    என்று   பொதுவாக    வழங்கினாலே
  சைவத்தில்    சிதம்பரம்   நடராசப் பெருமானின்  
  கோயிலைத்தான்   குறிக்கும்  . 
  ஊர்ப்பெயர்    தில்லை;   கோயிலின்  
பெயர்   சிதம்பரம்,   இன்று  ஊர்ப்பெயர்  
வழக்கில்  மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப்  
பெயராக   வழங்கி  வருகிறது.





தில்லைமரங்கள்    அடர்ந்த    காடாக   
இருந்தமையால்   தில்லைவனம்   என்று   
பெயர்   பெற்றது.   இம்மரங்கள் 
தற்போது   சிதம்பரத்தில்   இல்லை; 
ஆனால்   இதற்கு   அண்மையிலுள்ள   
 பிச்சாவரத்தில்   உப்பங்கழியின்
கரைகளில்   காணப்படுகின்றன.


 

 

சிதம்பரத்தில்  உள்ள   நடராஜர்  ஆலயம்   
எந்த   ஆண்டு   கட்டப்பட்டது   என்பதற்கு   
சரியான   ஆதாரம்   எதுவும்    இல்லை.

பஞ்சபூதத்   தலங்களில்   ஆகாயத்தலம்     
என்று   பெயர்   பெற்றிருக்கும்   தலம்   
தான்   சிதம்பரம்.    இந்த  கோவில்   
40 ஏக்கர்  நிலப்பரப்பில்    பிரம்மாண்டமாக
அமைந்துள்ளது.   கிழக்கு   ,மேற்கு   
கோபுரங்களில்  108    நடன   
பாவங்களையும்   அறிவிக்கும்   சிறபங்கள் 
அழகிய    முறையில்    அமைக்கப்பட்டுள்ளன. 

அப்பர்,    சம்பந்தர்,   சுந்தரர்   மற்றும்   
மாணிக்கவாசகர்   ஆகிய   நால்வரும்   
ஒவ்வொரு   வாயில்  வழியாக  

தில்லை   சிதம்பரம்   கோவிலுக்குள்   
எழுந்தருளினர்   என்று   வரலாறு   
கூறுகிறது.   மேற்குக்   கோபுர   வாயில் 
வழியாக   திருநாவுக்கரசரும்,   
தெற்குக் கோபுர   வாயில் 
வழியாக   திருஞானசம்பந்தரும்,   
வடக்கு   கோபுர   வாயில்    வழியாக   
சுந்தரரும்,   கிழக்குக்   கோபுர   வாயில் 
வழியாக மாணிக்கவாசகரும்    வந்து    
தில்லைச்   சிற்றம்பலத்திலுள்ள   
சிவபெருமானை   வழிபட்டுள்ளனர்.




நடராஜப்   பெருமானுக்கு   உள்ள   
திருச்சபைகள்   ஐந்தில்  சிதம்பரம்   
தலம்    கனகசபையாகும்.    மற்றவை 
1)   திருவாலங்காடு - இரத்தினசபை,   
2) மதுரை - வெள்ளிசபை,   
3) திருநெல்வேலி - தாமிரசபை,  
4) திருக்குற்றாலம் - சித்திரசபை.





சைவ,    வைணவ    சமய   ஒற்றுமைக்கு    
சிதம்பரம்   கோவில்    ஒரு   சிறந்த   
எடுத்துக்காட்டாக   திகழ்கிறது.  
108    வைணவ    திவ்யதேசங்களில்    
ஒன்றான  திருசித்திரக்கூடம்   
என்று    அழைக்கப்படும்   கோவிந்தராஜப்    
பெருமாள்    கோவில்    தில்லை   
சிதம்பரம்    கோவிலின்    உள்ளே    
அமைந்திருக்கிறது.  நடராஜப்   
பெருமானின்    சந்நிதிக்கு   நேர்   
எதிரே  நின்றுகொண்டு    நடராஜரை    
தரிசனம்    செய்தபிறகு  இடதுபுறம்    
திரும்பி    நின்றால்    கோவிந்தராஜப்    
பெருமாள்   சந்நிதியைக்   காணலாம்.   
இரண்டு   சந்நிதிகளும்   அருகருகே   
அமைந்திருப்பது    தில்லை கோவிலின்   
சிறப்பாகும்.




 ஆண்டுக்கு   இரண்டு  முறை   
நடக்கும்   பத்து  நாள்    உற்சவம்  
மிகவும்   பிரசித்திப்பெற்றது .   
ஆனி   மாதத்தில்   நடைபெறும்  
ஆனி   திருமஞ்சனமும்  ,    
மார்கழியில்   நடைபெறும்  
ஆருத்ரா   தரிசனமும்    இங்கு   
மிகவும்  பெயர்பெற்ற    திருவிழாக்கள்.







பொதுவாக    எல்லாக்   கோவில்களிலும்   
மூலவர்   கருவறையில்   இருப்பார் .  
உற்சவர்    வெளியே  வருவார்.   ஆனால்  
இங்கு மட்டும்   மூலவர்   ஒன்பதாம்   
நாள்  அன்று   நடக்கும்  தேர்த்  
திருவிழாவில்   நான்கு   வீதியிலும்   
வலம்    வருவார்.

 இது   இங்கு  தனிச்  சிறப்பு   
வாய்ந்ததாகும்.

9 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நான் சில படங்களை எடுத்து கொண்டேன். கோவிலின் சிறப்பையும் தெரிந்து கொண்டேன்

SUFFIX சொன்னது…

சேகரித்து பல தகவல்களை தந்திருக்கிங்க. நன்றி

malarvizhi சொன்னது…

நன்றி தமிழ். நன்றி suffix .வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

நன்றி... அந்த ஊர்காரன் என்ற முறையில் பெருமையாக உணர்கிறேன்...

Priya சொன்னது…

நல்ல தகவல்கள்... போட்டோஸும் நல்லாயிருக்கு!

Vikis Kitchen சொன்னது…

Very nice info and a beautiful blog. Very eager to visit this Temple and the city.

Haddock சொன்னது…

Is that in Madurai?
I had been there long back and remember climbing to the top roof.

Pinnai Ilavazhuthi சொன்னது…

நல்ல படைப்பு அக்கா. பிச்சாவரத்தை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். மேலும் இது போன்ற தகவல்களை எதிர்நோக்கி தம்பி இளவழுதி

virutcham சொன்னது…

good info and beautiful photos.

http://www.virutcham.com

Pit