சனி, 2 ஜனவரி, 2010

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ..........

காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது 4 டம்ளர்
அளவு ஆறிய வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.





அதிகாலையில் குறைந்தபட்சம் 2 கி .மீ தூரம் நடக்க
வேண்டும். உடலுக்கு நல்ல பிராண வாயு கிடைக்கும்.
முதல் கால் மணி நேரம் மெதுவாகவும், அடுத்த
அரைமணி நேரம் வேகமாகவும் , கடைசி கால் மணி
நேரம் மெதுவாகவும் நடக்க வேண்டும்.முடியாதவர்கள்
வீட்டிலேயே சின்னச்சின்ன உடற்ப்பயிற்சிகள் செய்யலாம்.




தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு
மிகவும் நல்லது. நெல்லிக்காயை காய வைத்து பொடி
பண்ணி அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.



நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் , கீரை வகைகள் , பயறு
வகைகள் உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.




அசைவம் விரும்பினால் கடல் மீன்களில் சிறிய வகை
மீன்கள் , தோல் நீக்கிய கோழி இறைச்சி நிறைய சாப்பிடலாம்.
இவற்றில் புரதச் சத்து அதிக அளவில் கிடைக்கும்.

வயது 35 தாண்டியவர்கள் வருடம் ஒருமுறை மருத்துவரிடம்
சென்று உடல்நலத்தை பரிசோதித்து கொள்வது அவசியம்.

6 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

என்ன DR.மலர் MBBS-ஆ? ஆரோக்யத்துக்கு எவ்வளவு அக்கறை? சும்மா தூள் கிளப்புங்க....

புலவன் புலிகேசி சொன்னது…

நல்ல உபயோகமான அறிவுரைகள்..நன்றி..

ராமலக்ஷ்மி சொன்னது…

புது வருடத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க நல்ல குறிப்புகள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. நன்றி.

SUFFIX சொன்னது…

அருமையான தொகுப்பு, அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவை. கடல் மீன்களில் கிடைக்கும் ஒமேகா‍ ஆசிட் செயற்கையாக செய்ய முடியாது என படித்து இருக்கிறேன். வாழ்க வளமுடன்.

Pinnai Ilavazhuthi சொன்னது…

நல்ல படைப்பு. புத்தாண்டு வாழ்த்துக்கள்

Pit