திங்கள், 30 நவம்பர், 2009

பெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்




நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை

பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்

மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து

கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ

தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி

ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்

மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,

ராஜராஜனை பற்றியும் தான் .



தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்

என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்

பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .



தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை

குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .

கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,

அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்

கட்டப்பட்டது .


இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5

அடுக்குடன் உள்ள முதல வாயில் " கேரளாந்தகன்

திருவாயில் " எனப்படும் . கி . பி 988 இல் கேரளா

மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி

பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை

வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .


இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள " ராஜராஜன்

திருவாயில் " ஆகும் .



மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று

மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு

தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு

தளத்துடன் தற்போது காட்சி தருகிறது .

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது

என்பது தவறான செய்தி .


விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே

கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்

உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு

நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்

என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்

ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு

சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .



பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :

216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்

முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்

பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்

மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது

சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை

காண முடியவில்லை .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்

திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்

தான் என்பது வரலாற்று உண்மை .

6 கருத்துகள்:

Rajeswari சொன்னது…

இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது

தவறான செய்தி .///

ஓ..

Rajeswari சொன்னது…

பல புதிய தகவல்கள்...

மிக்க நன்றி மலர்விழி அவர்களே...

சுசி சொன்னது…

புதிய பல தகவல்கள் மலர்விழி...

இராயர் சொன்னது…

BalaKumaran avarkalin Udaiyar novel padithu varirkala??

அண்ணாமலையான் சொன்னது…

நம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி "
எங்கே அவங்கள கானோம்? போட்டோ நீங்க எடுத்ததா?

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Pit