வெள்ளி, 7 செப்டம்பர், 2012




உருகும் பனிமலைகள்...


உலகின் முன்னணி துருவ பகுதிகளின் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான், சுற்றுச் சூழலை மாசு படுத்தாத எரிசக்திக்கு உலக மக்கள் மாற வேண்டியதை வலியுறுத்தி உலகமெங்கும் பிரயாணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.அவர் தன் பிரயாணத்தில் இந்தியா வந்த போது சென்னையில் நடந்த பல்வேறு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சென்னையின் வெப்பம் அவருக்கு புத்துணர்ச்சியை தருவதாகவும் அதே நேரத்தில் அந்
த வெப்பத்தின் பின்னால் இருக்கும் அபாயம் அச்சத்தை ஊட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.அன்டார்டிகாவிலும் ,ஆர்டிக் பகுதியிலும் பனி மலைகள் வெகு வேகமாக உருகி வருவதாகவும் இதே நிலை நீடித்தால் இன்னும் 90 வருடங்களில் சென்னை கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் கூறியுள்ளார்.இன்னும் 90 வருடங்கள் கழித்து தானே...நாம் என்ன பார்க்கவா போகிறோம் அழிவதை என்று நினைக்க வேண்டாம்...அழியபோவது நம் சந்ததியினர் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர் தன்னுடைய உரையில் கடல் மட்டம் இரண்டு மீட்டர் உயரும் என்றும் அப்படி உயரும் பட்சத்தில் உலகில் பல்வேறு இடங்கள் கடலுக்குள் மூழ்கி விடும் என்றும் ,அதுவும் மிக விரைவில் நடக்கும் என எச்சரித்துள்ளார்.

இதை தடுக்க ஒரே வழி நிலக்கரி ,பெட்ரோலியம் போன்ற புகை கக்கும் பொருட்களுக்கு பதிலாக சூரிய சக்தி ,காற்று சக்தி போன்றவற்றை பயன் படுத்துவது மிகவும் சிறந்தது என வலியுறுத்தி வருகிறார்.
ஆண்டு தோறும் 200 மில்லியன் டன்கள் கார்பன் மோனாக்சைடும், 50 மில்லியன் டன் ஹைட்ரோ கார்பனும் ,150 மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடும் ,190 மில்லியன் டன் சாம்பலும் ,காற்று மண்டலத்தில் கலந்து அதை நச்சு தன்மையாக மாற்றி வருகிறது.
கால நிலையை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் கரிய மில வாயு கடந்த 100 ஆண்டுகளில் தொழில் புரட்சி காரணமாக 26 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 700 கோடி டன் கார்பன் வெளியிடபடுகிறது.வாகனங்கள் ,தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து இந்த மாசு வெளியேறுகிறது. காடுகளை ஆண்டு தோறும் அழித்து வருவதால் 200 கோடி டன் கார்பன் சுத்திகரிப்பு தடை படுகிறது.வெளியேறும் கார்பனின் அளவு அதிகமாகவும்,சுத்திகரிப்பு செய்வது குறைவதும் ஆபத்திற்கான அறிகுறிகள்.இதன் காரணமாக உலக வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விளைவு...

அதிக வெப்பம் காரணமாக பனிமலைகள் உருகும். மனிதர்களுக்கு தோல் நோய்கள் உண்டாகும். கால்நடைகள் நோயால் பாதிக்கப் படும். விவசாயத்தில் மகசூல் பாதிக்கப்படும்.. இதன் காரணமாக பூமியின் பசுமை நமக்கு கொடுக்கும் சுகமானது கனவாக போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தல் மிகவும் அவசியமாகிறது.

சனி, 5 நவம்பர், 2011

 
அன்பு..
 
 
 
 
 எல்லோருக்கும் பிடித்த ,எல்லோரையும் கவரக்கூடிய ஒரு அற்புதமான உணர்வு....அன்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் வெகு விரைவில் எதிராளியிடம் ஐக்கியமாக முடியும்.அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம்,காதல் ,நேசம்,,கருணை இப்படி பல பரிணாமங்கள் உள்ளது.
அனைத்து விதமான உணர்வுகளிலும் தலை சிறந்தது அடுத்தவர்கள் மேல் நாம் காட்டும் பரிவு தான்...அன்பு என்பது மகிழ்ச்சியாக
இருப்பது மட்டும் கிடையாது..அது... ஆழமான அதே சமயத்தில் அழகான வலியும் கூட...
அன்பு நிறைந்த உள்ளத்தில் பொறாமை இருப்பதில்லை.இறுமாப்பு இருக்காது..சினம் கொள்ளாது.அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காது.சாந்தம் குடியிருக்கும்.அன்பை வெளிபடுத்தும் இதயத்திற்கு ஏழை ,பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க தெரியாது.
அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம்.எதையும் அன்புடன் கூறும் போது,அதற்கு நல்ல பலன் இருக்கும்..அன்பு செய்வோம் .........:):):)

வியாழன், 3 நவம்பர், 2011

கண்ணீர்...
 
 
 
  கண்ணீர் பெரும்பாலும் நம் வேதனைகளையும் ,வலியையும் வெளிபடுத்துவதன் அறிகுறி என நினைக்கிறோம்.ஆனால் எந்த ஒரு உணர்வு அதிகமானாலும் கண்களில் கண்ணீர் வரும் என்பதை பலரும் அறிவதில்லை...
நம் வாழ்வில்  , வலியை மட்டுமே அதிகமாக உணர்வதால் ,நாம் கண்ணீரை அதனுடன் பிணைத்து  விடுகிறோம்.ஆனால் மனம் மிகவும் அமைதியாகவோ அல்லது ஆனந்தமாகவோ இருக்கும் போது கூட கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதை நம்...மில் பலரும் அறிந்திருக்கவில்லை. அன்பு, ஆனந்தம் ,அமைதி இவற்றின் மூலம் கண்களில் கண்ணீர் வந்து ,அதை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால் வாழ்வின் ரகசியத்தை  இன்னும் முழுமையாக உணர வில்லை என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது. அப்படி அனுபவிக்கும் பட்சத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் அதை தடுக்க முயலாதீர்கள் ...அனுபவியுங்கள் அந்த கண்ணீரை......ஆனந்தத்துடன்.......:):):)

செவ்வாய், 14 ஜூன், 2011

தஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்










ராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெரியகோயில் கட்ட பயன்படுத்தி இருக்க வேண்டும்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
தஞ்சைக்கு தெற்கு ,தென்மேற்குத் திசைகள் தவிர மற்ற திசைகள் அனைத்தும் ஆறுகளாலும்,வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன.எனவே அந்த திசைகளின் வழியாக மிகவும் கனமான பெரிய கற்பாறைகளை கொண்டு வருவது கடினமான காரியம் ஆகும்.தஞ்சையை விட சற்று உயரமான தென்மேற்கு திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது.மேலும் தஞ்சைக்கு மிக அருகில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இந்த பகுதி தான்.
இரண்டாவது காரணம்......


தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கல் பாறைகள் எந்தவகையை சேர்ந்ததோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குன்னாண்டார்கோயில் பகுதி ஆகும்.
கற்களே இல்லாத ஓர் இடத்திற்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை ,ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வந்து கட்டியுள்ளனர்.அக்காலத்தில் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகளும் இல்லாதபோதும் பிரம்மாண்டமான பாறைகளை கொண்டு வந்தது மகத்தான சாதனையே.

இந்த தகவல் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் 'இராஜராஜேச்சரம்' புத்தகத்தில் உள்ளது.
இதே போன்று விஜயநகர பேரரசு காலத்தில் 18 ' நீளமும்,8 ' அகலமும் ,12 ' உயரமும் உடைய நந்தியை வைத்ததும் மிகப் பெரிய சாதனையே.











இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கி.பி. 750 இல் சோழ நாட்டில் நந்திபுரத்து ஆயிரத்தளி என்னும் ஊரில் ஆயிரம் லிங்கங்களை பிரதிட்டை செய்து ஓர் ஆலயம் கட்டினான்.பின்பு அந்த ஆலயம் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.அழிக்கப்பட்ட அந்த ஆலயம் இருந்த பண்டைய நந்திபுரம் என்னும் பேரூர் தற்போது தஞ்சைக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை,செங்கமேடு,இரட்டைக்கோயில்,ஆவிக்கரை என்னும் சிற்றூர்களாக மாறி விட்டன.
இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையிலிருந்து புதையுண்டு கிடந்த 108 சிவலிங்கங்களை எடுத்து வந்து 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் தஞ்சை கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பிரதிட்டை செய்தார்.

.பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .

ராஜராஜன் இலங்கையை முழுதும் வென்றான்.அதனால் அவனுக்கு 'சிங்களாந்தகன்' என்ற பெயர் உண்டு.இலங்கைக்கு  மும்முடி சோழமண்டலம் என்று பெயரிட்டான்.தஞ்சை பெரியகோயில் வழிபாட்டிற்கு இலங்கையிலும் நிலம் கொடுக்கப்பட்டது.

Pit