அன்பு..
எல்லோருக்கும் பிடித்த ,எல்லோரையும் கவரக்கூடிய ஒரு அற்புதமான
உணர்வு....அன்பான வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நாம் வெகு விரைவில்
எதிராளியிடம் ஐக்கியமாக முடியும்.அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம்,காதல்
,நேசம்,,கருணை இப்படி பல பரிணாமங்கள் உள்ளது.
அனைத்து விதமான உணர்வுகளிலும் தலை சிறந்தது அடுத்தவர்கள் மேல் நாம் காட்டும் பரிவு தான்...அன்பு என்பது மகிழ்ச்சியாக
இருப்பது மட்டும் கிடையாது..அது... ஆழமான அதே சமயத்தில் அழகான வலியும் கூட...
அன்பு நிறைந்த உள்ளத்தில் பொறாமை இருப்பதில்லை.இறுமாப்பு இருக்காது..சினம்
கொள்ளாது.அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காது.சாந்தம்
குடியிருக்கும்.அன்பை வெளிபடுத்தும் இதயத்திற்கு ஏழை ,பணக்காரன் என்ற
பாகுபாடு பார்க்க தெரியாது.
அன்பு அனைத்தையும் பொறுத்துக்
கொள்ளும், அன்பு அனைத்தையும் நம்பும், அன்பு எதற்கும்
அடிபணியும்.எதையும் அன்புடன் கூறும் போது,அதற்கு நல்ல பலன்
இருக்கும்..அன்பு செய்வோம் .........:):):)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக