புதன், 22 டிசம்பர், 2010

ஆருத்ரா தரிசன விழா




பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

பூலோக கைலாசம் என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் மூலவரே சபையை விட்டு வெளியில் வந்து அன்னை சிவகாமியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் .இந்த அற்புதமான காட்சியை வேறு எங்கும் காணமுடியாத ஓர் அறிய காட்சி ஆகும்.தேர் நான்கு வீதிகளையும் வலம்வந்து முடிந்ததும் மாலை ஏழு மணிக்கு பிறகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர்.
மறுநாள் , அதாவது திருவாதிரை நட்சத்திரத்தன்று அதிகாலையில் மகா அபிஷேகமும் ,அதன் பிறகு ஆபரண அலங்காரமும் , லட்ச்சார்ச்சனையும் நடைபெறும்.அன்று மதியம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும்.
தங்க ,வைர  ஆபரணங்கள் ஜொலிக்க ,அலங்காரம் செய்யப்பட்ட நடராஜ மூர்த்தியும்,சிவகாமி அம்மையும் வாத்திய கோஷங்களும்,வேத மந்திரங்களும் ஓத ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து முன்னும் ,பின்னுமாக ஆனந்த நடனமிட்ட வண்ணம் சிற்சபைக்கு செல்கின்றனர்.இந்த தரிசனக்காட்சியையே ஆருத்ரா தரிசனம் என்பர்.
இந்த அற்புதக் காட்சியைக் காண தமிழகத்திலிருந்து மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள்.வாழ்வில் ஒருமுறையாவது இந்த தரிசன காட்சியை பக்தர்கள் கண்டு களிக்க வேண்டும்.

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

ஆருத்ரா தரிசனம். அழகிய தரிசனம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

உங்கள் பதிவின் வழியாக நேரில் காணவிடினும் கண்ணில் நேராக கண்டதை போல்... மகிழ்ச்சியாய்...

வாழ்த்துகள்....

malarvizhi சொன்னது…

நன்றி.....

Pit