சனி, 24 ஏப்ரல், 2010
வியாழன், 15 ஏப்ரல், 2010
குழந்தைகளும் ,அதன் விளையாட்டுக்களும் ....
"ஓடி விளையாடு பாப்பா .நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா "
"மாலை முழுதும்விளையாட்டு .இதைவழக்கப்படுத்திக் கொள்ளுபாப்பா "
இவை குழந்தைகளுக்காக பாரதியார் பாடிய பாடல்கள் .
ஆனால் இன்று எத்தனை குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுகின்றன ?
குழந்தை பருவத்திலிருந்தே சில பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிப்பது அதன் உடலுக்கு வலு சேர்க்கும் .
சில வருடங்களுக்கு முன் நடத்தப் பட்ட ஆய்வில் குழந்தைகள் வழக்கமாக இருக்க வேண்டியதை காட்டிலும் கொழுகொழுவென இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது .
அவர்களில் 24 சதவீதம் பேருக்கு வழக்கத்தை விட கூடுதல் ரத்தஅழுத்தம் இருந்தது
தெரிய வந்தது .41 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் கூடுதலாக இருந்தது .
மொத்தத்தில் 98 சதவீதம் குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது .
முன்னேறிய நாடுகளில் நிலவும் இந்த நிலைமை நமது நாட்டிலும் உள்ளது .
இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்க்கை முறை .நாம் இன்று தாவறான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் .அதனால் ஏற்படும் விளைவை நாம் குழந்தைகளின் இளம் பருவத்திலேயே காண்கிறோம் .
கிராமங்களில் வாழும் குழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லை .அவர்களுக்கு ஓடி விளையாட போதிய இடவசதி உள்ளது .
ஆனால் நகரங்களில் மிகவும் நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் பாவம் செய்தவை .போதிய இடவசதி அவர்களுக்கு கிடையாது மேலும் அவர்களை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை .இதனால் அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி கிடைப்பதில்லை .இதுவே அவர்களின் ஆரோக்கிய குறைவுக்கு முக்கிய காரணமாகும் .
பெற்றோர் சிறிது நேரத்தையும் ,கொஞ்சம் சக்தியையும் செலவிட்டால் ,அதுவும் தீவிர அக்கறையுடன் கொஞ்சம் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடியும் .
எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை கொடுக்கலாம் .சற்றே வளர்ந்த குழந்தைகள் எதன்மீதாவது ஏற விரும்பினாலோ ,குதிக்க விரும்பினாலோ அதை பெற்றோர் தங்கள் கண்பார்வையில் அனுமதிக்கலாம் .
பெற்றோர்களே ஒருசில உடற்பயிற்சி விளையாட்டுக்களை குழந்தைகளுடன் விளையாடலாம் .விளையாடும் போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம் .அதை சொல்லி அவர்களை பயமுறுத்தி கட்டுபடுத்தக் கூடாது .அவர்கள் விழுந்தாலும் பிறகு எழுந்து தன் போக்கில் விளையாடுவார்கள் .
அதை தடுக்கக் கூடாது .
சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு சமசீர் உணவு அளிக்க வேண்டும் .புரத சத்து நிறைந்தஉணவு வகைகள் ,கீரை வகைகள் ,காய்கறிகள் ,மீன் ,முட்டை ,பால் ,இவற்றை சரிவிகிதத்தில் கொடுக்கலாம் .எண்ணெய் பதார்த்தங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
.வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளை உண்ணும் பழக்கத்தை பெற்றோர் அவசியம் ஏற்படுத்தவேண்டும் .அதுவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகாட்டுதலாகும் .
"மாலை முழுதும்விளையாட்டு .இதைவழக்கப்படுத்திக் கொள்ளுபாப்பா "
இவை குழந்தைகளுக்காக பாரதியார் பாடிய பாடல்கள் .
ஆனால் இன்று எத்தனை குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுகின்றன ?
குழந்தை பருவத்திலிருந்தே சில பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிப்பது அதன் உடலுக்கு வலு சேர்க்கும் .
சில வருடங்களுக்கு முன் நடத்தப் பட்ட ஆய்வில் குழந்தைகள் வழக்கமாக இருக்க வேண்டியதை காட்டிலும் கொழுகொழுவென இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது .
அவர்களில் 24 சதவீதம் பேருக்கு வழக்கத்தை விட கூடுதல் ரத்தஅழுத்தம் இருந்தது
தெரிய வந்தது .41 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் கூடுதலாக இருந்தது .
மொத்தத்தில் 98 சதவீதம் குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்தது .
முன்னேறிய நாடுகளில் நிலவும் இந்த நிலைமை நமது நாட்டிலும் உள்ளது .
இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்க்கை முறை .நாம் இன்று தாவறான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் .அதனால் ஏற்படும் விளைவை நாம் குழந்தைகளின் இளம் பருவத்திலேயே காண்கிறோம் .
கிராமங்களில் வாழும் குழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லை .அவர்களுக்கு ஓடி விளையாட போதிய இடவசதி உள்ளது .
ஆனால் நகரங்களில் மிகவும் நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் பாவம் செய்தவை .போதிய இடவசதி அவர்களுக்கு கிடையாது மேலும் அவர்களை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை .இதனால் அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி கிடைப்பதில்லை .இதுவே அவர்களின் ஆரோக்கிய குறைவுக்கு முக்கிய காரணமாகும் .
பெற்றோர் சிறிது நேரத்தையும் ,கொஞ்சம் சக்தியையும் செலவிட்டால் ,அதுவும் தீவிர அக்கறையுடன் கொஞ்சம் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த முடியும் .
எப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை கொடுக்கலாம் .சற்றே வளர்ந்த குழந்தைகள் எதன்மீதாவது ஏற விரும்பினாலோ ,குதிக்க விரும்பினாலோ அதை பெற்றோர் தங்கள் கண்பார்வையில் அனுமதிக்கலாம் .
பெற்றோர்களே ஒருசில உடற்பயிற்சி விளையாட்டுக்களை குழந்தைகளுடன் விளையாடலாம் .விளையாடும் போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படலாம் .அதை சொல்லி அவர்களை பயமுறுத்தி கட்டுபடுத்தக் கூடாது .அவர்கள் விழுந்தாலும் பிறகு எழுந்து தன் போக்கில் விளையாடுவார்கள் .
அதை தடுக்கக் கூடாது .
சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு சமசீர் உணவு அளிக்க வேண்டும் .புரத சத்து நிறைந்தஉணவு வகைகள் ,கீரை வகைகள் ,காய்கறிகள் ,மீன் ,முட்டை ,பால் ,இவற்றை சரிவிகிதத்தில் கொடுக்கலாம் .எண்ணெய் பதார்த்தங்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
.வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளை உண்ணும் பழக்கத்தை பெற்றோர் அவசியம் ஏற்படுத்தவேண்டும் .அதுவே அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழிகாட்டுதலாகும் .
சனி, 10 ஏப்ரல், 2010
பார்த்தேன் ,ரசித்தேன் ,பிடித்தேன் !!!!
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பித்துள்ளது . அங்கிருந்து சில படங்களை எடுத்து வெளியிட்டுள்ளேன் .நான் கண்டு ரசித்தவற்றை நீங்களும் கண்டு மகிழுங்கள்.
வியாழன், 8 ஏப்ரல், 2010
புவி வெப்பம் -3
கடந்த ஐம்பது வருடங்களில் புவி வெப்பத்தால் உலகில் ஏற்பட்டமாற்றங்களை பார்த்தால்,அதன் கோரத்தன்மையும் ,ஆபத்தும் நமக்கு நன்றாக புரியும்.புவி வெப்பத்தின் அடையாளமாக நமது வடதுருவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்கள் நம்மை சிந்திக்கவைக்கும்.
வடதுருவத்தில் பெரும்பாலும் மலையில் வசிக்கும் எழுபது வகையான தவளைகள் போக இடமில்லாமல் அழிந்தே போய்விட்டன.
பனிவாழ் உயிரினங்கள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.அதிலும் குறிப்பாக வடதுருவத்தில் வசிக்கும் பனிக்கரடிகளும்,தென்துருவத்தில் வசிக்கும் பென்குயின்களும் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையில் உள்ளன.
இமாலயம்,கிரீன்லாந்து,அலாஸ்கா மற்றும் தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.மேலும் கனடா,அலாஸ்கா,சைபீரியா போன்ற இடங்களில் உள்ள நிரந்தர பனிப்ப்ரதேசங்கள்அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில்உருகிவருகின்றன.
பறவைகள் அழிந்து போவதும்,பருவ காலத்திற்கு முன்போ அல்லது பின்போ பூக்கள் பூப்பதும்,கொசு போன்ற சிறு பூச்சிகள்அதிகமாக பெருகி வருவதற்கும் புவியின் வெப்பம் தான்காரணம்.
இதே போல் இங்கிலாந்து கடல்ப்பகுதியில் வாழும் உயிரினங்கள்,குளிர்பிரதேச பகுதியில் அதிக வெப்பம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா தான் பசுமைவாயுக்களை அதிக மாக வெளியிடுகின்றன .
இந்த சூழ்நிலையில் மேலும் நான்கு டிகிரி வெப்பம் அதிகரித்தால் என்னென்ன விழைவுகள் நேரும் என்பதை இப்போது பார்ப்போம்.
வறட்சி காரணமாக உணவு உற்பத்தி குறைந்து கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்ப்படும்.21 ஆம் நுற்றாண்டின்இறுதியில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .
அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் மட்டம் 2 அடி வரை உயரும் .அதன் காரணமாக பங்களாதேஷ் ,வியட்நாம் ,மற்றும் கடலோரத்தில் உள்ள நகரங்களாகிய லண்டன் ,நியூயார்க் ,டோக்கியோ ,கொல்கத்தா ,கராச்சி போன்றவை மிகவும் பாதிக்கப் படும் .
ஆர்க்டிக் துருவத்தில் உள்ள பனி பாதிக்கும் மேல் உருகிவிடும் .நிலத்தில் வாழும் உயிரினங்களில் 20 முதல் 50 சதவீதம் வரை அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது .
உலகில் உள்ள பல நாடுகளை இப்போதைக்காட்டிலும் மிகுந்த வேகத்துடனும் பலத்த காற்றுடனும் சூறாவளிகள் தாக்கும் .2005 ஆம் ஆண்டுஅமெரிக்காவை தாக்கிய கத்ரினா புயல் இதற்கு மிக சிறந்த உதாரணம் .
கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து லட்சம் சதுரமைல் கடல் பனி மறைந்துவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை இமையமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகி ஆறுகளில் சில காலத்திற்கு வெள்ளம் ஏற்படும்.பிறகு அவை வற்றி விடும் வாய்ப்பு உள்ளது .
மத்திய இந்தியாவை பொறுத்தவரை வருடம் தோறும் மழை அதிகரிப்பதால் பெருவெள்ளம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது .
மேலே குறிப்பிட்டுள்ளவை வெகு சில செய்திகளே.நிலைமை மிகவும் மோசமான பிறகு நடவடிக்கை எடுப்பதை விட வருமுன் காப்பதே மிகவும் சிறந்த செயல்.அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுப்பது,வறட்சியை சமாளிக்கக்கூடிய தாவரங்களை உருவாக்குவது,நீர் ஆதாரங்களை முறையாக பராமரிப்பது,ஆகியவை உடனடி அவசியம்.இந்த செயல்பாடுகள் பெரிதும் விரிவடைந்து அனைவரும் புவி வெப்பத்தை தடுக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.நமது சந்ததியினரை காத்திடுவோம்.வாழ்க வளமுடன்... நன்றி .
வடதுருவத்தில் பெரும்பாலும் மலையில் வசிக்கும் எழுபது வகையான தவளைகள் போக இடமில்லாமல் அழிந்தே போய்விட்டன.
பனிவாழ் உயிரினங்கள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையில் உள்ளன.அதிலும் குறிப்பாக வடதுருவத்தில் வசிக்கும் பனிக்கரடிகளும்,தென்துருவத்தில் வசிக்கும் பென்குயின்களும் முற்றிலுமாக அழிந்துபோகக்கூடிய நிலையில் உள்ளன.
இமாலயம்,கிரீன்லாந்து,அலாஸ்கா மற்றும் தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.மேலும் கனடா,அலாஸ்கா,சைபீரியா போன்ற இடங்களில் உள்ள நிரந்தர பனிப்ப்ரதேசங்கள்அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில்உருகிவருகின்றன.
பறவைகள் அழிந்து போவதும்,பருவ காலத்திற்கு முன்போ அல்லது பின்போ பூக்கள் பூப்பதும்,கொசு போன்ற சிறு பூச்சிகள்அதிகமாக பெருகி வருவதற்கும் புவியின் வெப்பம் தான்காரணம்.
இதே போல் இங்கிலாந்து கடல்ப்பகுதியில் வாழும் உயிரினங்கள்,குளிர்பிரதேச பகுதியில் அதிக வெப்பம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா தான் பசுமைவாயுக்களை அதிக மாக வெளியிடுகின்றன .
இந்த சூழ்நிலையில் மேலும் நான்கு டிகிரி வெப்பம் அதிகரித்தால் என்னென்ன விழைவுகள் நேரும் என்பதை இப்போது பார்ப்போம்.
வறட்சி காரணமாக உணவு உற்பத்தி குறைந்து கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்ப்படும்.21 ஆம் நுற்றாண்டின்இறுதியில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .
அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் மட்டம் 2 அடி வரை உயரும் .அதன் காரணமாக பங்களாதேஷ் ,வியட்நாம் ,மற்றும் கடலோரத்தில் உள்ள நகரங்களாகிய லண்டன் ,நியூயார்க் ,டோக்கியோ ,கொல்கத்தா ,கராச்சி போன்றவை மிகவும் பாதிக்கப் படும் .
ஆர்க்டிக் துருவத்தில் உள்ள பனி பாதிக்கும் மேல் உருகிவிடும் .நிலத்தில் வாழும் உயிரினங்களில் 20 முதல் 50 சதவீதம் வரை அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது .
உலகில் உள்ள பல நாடுகளை இப்போதைக்காட்டிலும் மிகுந்த வேகத்துடனும் பலத்த காற்றுடனும் சூறாவளிகள் தாக்கும் .2005 ஆம் ஆண்டுஅமெரிக்காவை தாக்கிய கத்ரினா புயல் இதற்கு மிக சிறந்த உதாரணம் .
கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து லட்சம் சதுரமைல் கடல் பனி மறைந்துவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை இமையமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகி ஆறுகளில் சில காலத்திற்கு வெள்ளம் ஏற்படும்.பிறகு அவை வற்றி விடும் வாய்ப்பு உள்ளது .
மத்திய இந்தியாவை பொறுத்தவரை வருடம் தோறும் மழை அதிகரிப்பதால் பெருவெள்ளம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது .
மேலே குறிப்பிட்டுள்ளவை வெகு சில செய்திகளே.நிலைமை மிகவும் மோசமான பிறகு நடவடிக்கை எடுப்பதை விட வருமுன் காப்பதே மிகவும் சிறந்த செயல்.அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தைத் தடுப்பது,வறட்சியை சமாளிக்கக்கூடிய தாவரங்களை உருவாக்குவது,நீர் ஆதாரங்களை முறையாக பராமரிப்பது,ஆகியவை உடனடி அவசியம்.இந்த செயல்பாடுகள் பெரிதும் விரிவடைந்து அனைவரும் புவி வெப்பத்தை தடுக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.நமது சந்ததியினரை காத்திடுவோம்.வாழ்க வளமுடன்... நன்றி .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





































