அம்மாவின் அருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மாவின் அருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 நவம்பர், 2009

படித்ததில் பிடித்தது - 1

அம்மாவின் அருமை


அன்று சுயநலமாய் நான் , சங்கடத்தில் நீங்கள்

திமிராய் நான் , திணறிய நீங்கள்

கர்வமாய் நான் , காயத்தோடு நீங்கள்

சோம்பேறியாய் நான் , சோர்ந்த நீங்கள் ....

இன்று நான் காயத்தோடு சங்கடத்தில்

சோர்ந்து திணறும் போது சுருக்கென்று உறைக்கிறது !



சமையலறையில் உதவிக்கு அழைக்கும் நேரம்

பலவகை சாக்குபோக்கு சொல்லி நழுவியதும்

ஐந்து பேருக்கு சமைக்க ஒருவர் மட்டும்

போதுமே என்று வார்த்தையால் மடக்கியதும்

இன்று நான் தனியாக சமையலறையில்

பாத்திரங்களோடு போராடும் அந்த

தருணத்தில் எட்டி பார்கிறது !


நான் சாப்பிட தினமும் தட்டில் சாதம்

பிசைந்து வைத்ததும் , உணவை கையில்

உருட்டி தந்ததும் , இன்று நான்

சிலபல காரணங்களுக்காக சாப்பிடாமலே

உறங்கும் பொழுது நினைவுகள்

கண்ணீராய் விழுகிறது .


இவை எல்லாம் நீங்கள்

மறந்து இருக்க கூடும்

நானும் மறந்து தான் இருந்தேன் ,

தாயாகும் வரை !!

பதினாறு வயதில் அறிந்தும்

அறியாமலும்

நான் கொண்டிருந்த கோபத்தையும் ,

பிடிவாதத்தையும்

ஆறு வயது ஆகும் முன்பே வெளிபடுத்தும்

என் மகள்

இன்னும் அழுத்தமாய் உணர்த்துகிறாள் உன் அருமையை .....


சில வருடங்களுக்கு முன் மங்கையர் மலரில் ஒரு சகோதரி எழுதிய இந்த கவிதை தான் எத்தனை உண்மை!!!!.

Pit